பேரூந்து கட்டணம் 6.56 சதவீதத்தினால் அதிகரிக்க அரசு தீர்மானித்துள்ள நிலையில், குறித்த சதவீதத்தின் அடிப்படையில் புதிய கட்டணப் பட்டியலை இதுவரையில் இலங்கை போக்குவரத்து சபையினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படாத நிலையில், குறித்த புதிய கட்டணப் பட்டியல் இன்று(16) வெளியிடப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆரம்பக் கட்டணமான 10.00 இல் எவ்விதமான மாற்றங்களும் மேற்கொள்ளப்படாத நிலையில், இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பேரூந்துகளுக்கு புதிய கட்டண முறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
