திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயது எல்லையை எவ்வித விதிவிலக்குமின்றி 18 ஆக உயர்த்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை, மலேசியா அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
அதேவேளை, குழந்தை திருமணங்களுக்கு மலேசியா முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசகர் வலியுறுத்தியுள்ளார்.
மலேசியாவில் திருமணம் செய்துகொள்வதற்கான வயது 18 ஆக உயர்த்துவதாக மலேஷிய அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
இந்நிலையில், அந்நாட்டிலுள்ள மதத் தலைவர்கள் இந்த தீர்மானத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.