திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பதை கட்டாயமாக்க கோரிக்கை…

திரையரங்குகளில் படம் திரையிடப்பட முன்னர் தேசிய கீதம் இசைப்பதை கட்டாயமாக்குமாறு பல தரப்புக்களில் இருந்து கோரிக்கை வந்துள்ளதாக தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம் கூறியுள்ளது.

திரைப்படங்களை விநியோகம் செய்யும் உரிமை, நீதிமன்றத்தின் ஊடாக திரைப்படக் கூட்டுத்தாபனத்திற்கு கிடைத்த பின்னர் திரையரங்குகளில் தேசிய கீதத்தை இசைப்பதை கட்டாயமாக்க நடவடிக்கை எடுப்பதாக திரைப்பட கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் எம்.என்.ஆர். அபேவர்தன கூறியுள்ளார்.

இதேவேளை, பாரம்பரிய ரீதியாக சில திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவதுடன், சில திரையரங்குகளில் அது இடம்பெறுவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.