எதிர்காலத்தில் சிறந்த வெற்றியை அடைவதற்கு உதவுவதற்காக திறமையான இளைஞர்களுக்கு புலமைப்பரிசில்கள் மற்றும் பரிசுகளை வழங்கும் நிகழ்வு நேற்று(12) இலங்கை அணியின் முன்னாள் வீரர் திலகரத்ன டில்ஷான் ஏற்பாடு செய்த நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கலந்து கொண்டிருந்தார்.
திலகரத்ன டில்ஷான் அண்மையில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

