பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவிற்கு எதிராக உடனடியாக நம்பிக்கையில்லா பிரேரணையினை கொண்டுவர ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக குறித்த கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்றில் சுயாதீனமாக நடந்து கொள்வது சபாநாயகரின் கடமை என்றும், அதற்கு மாறாக பிரதமருக்கும் ஆட்சிக்கும் எதிராக ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சார்பாக அவர் நடந்து கொண்டதாக பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
Rishma