முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகேவிற்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள பிணை தற்காலிகமாக இடைநீக்கப்பட்டுள்ளதால் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சட்டமா அதிபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இது தொடர்பான கடிதம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.