தில்ருக்ஷியின் இராஜினாமா குறித்த இறுதித் தீர்மானம் இன்று..

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்‌ஷி டயஸ் விக்ரமசிங்கவின் இராஜினாமா கடிதம் குறித்த ஜனாதிபதியின் இறுதித் தீர்மானம் இன்று(18) அறிவிக்கப்படவுள்ளது.

நேற்று(17) தில்ருக்‌ஷி தனது இராஜினாமாக் கடிதத்தை  சமர்ப்பித்திருந்தார்.

இந்நிலையில் இந்தியா சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை தாயகம் வந்தார்.

இதன்படி தில்ருக்‌ஷியின் இராஜினாமா தொடர்பில் இன்று அவர் இறுதி முடிவை வௌியிடுவார் எனத் தெரியவந்துள்ளது.