தில்ஷானுக்கு ஒருநாள் தொடரில் விளையாட வேண்டாமென கிரிகெட் சபை அழுத்தம் கொடுத்ததா..?

இலங்கை அணி வீர ர் திலகரத்ன தில்ஷான் இங்கிலாந்து அணிக்கெதிரான ஒரு நாள் தொடரில் விளையாடப் போவதில்லையென அறிவித்துள்ளார்.

உபாதை காரணமாக இம்முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தில்ஷானிடம் ஒரு நாள் தொடரில் விளையாட வேண்டாம் என இலங்கை கிரிக்கெட் சபை கேட்டுக் கொண்ட தாக தகவல் கசிந்துள்ளது.

தில்ஷான் இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும் நம்பத் தகுந்த வட்டாரங்களின் படி அவர் இம்முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அவர் ஒருநாள் , இருபதுக்கு 20 போட்டிகளில் மாத்திரமே விளையாடி வருகின்றார்.

இந்நிலையில் அவர் விரைவில் தனது ஓய்வு மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் முடிவை அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.