திஸ்ஸ அத்தநாயக்கவின் பிணை மனு நீதிமன்றினால் நிராகரிப்பு.

போலி ஆவண குற்றச்சாட்டின் பேரில் கைதாகியுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்கவின் பிணை மனு கொழும்பு மேல் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது போலியான ஆவணங்களை வெளியிட்டமை மற்றும் 3 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் திஸ்ஸ அத்தநாயக்கவை எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.