புகையிரத சங்கங்கள் பல இணைந்து இன்று(08) நள்ளிரவு முதல் முன்னேடுக்கவிருந்த 48 மணி நேரம் வேலை நிறுத்தத்தை ஒத்திவைக்க அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக புகையிரத தொழிற் சங்க தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் நிலவும் பெற்றோல் தட்டுப்பாட்டினை கருத்திற் கொண்டே குறித்த வேலை நிறுத்தத்தினை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாவும் தெரிய வருகின்றது.
இதற்கு முன்னர் தமது கோரிக்கை தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதும் இதுவரை தமக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவில்லை என புகையிரத கட்டுப்பாட்டு சங்கத்தின் பிரதான செயலாளர் பீரிஸ் தெரிவித்திருந்தார்.
குறித்த வேலை நிறுத்தத்தில் ரயில் எஞ்சின் சாரதிகள், ரயில் பாதுகாப்பு காவலர் மற்றும் ரயில் கட்டுப்பாட்டு மற்றும் காவலர்கள் ஆகியோர் பங்கேற்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
.
E – (reeshma)