பேலியகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துடுகெமுனு மாவத்தையில் அமையப் பெற்றுள்ள தொழிற்சாலை வளாகமொன்றில் மனித தலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அவசர அழைப்பிற்கு வந்த தகவலின்படி குறித்த தலையினை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மணித் தலையானது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் பேலியகொட பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.