அம்பலாங்கொட, பலபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், நேற்று(05) இரவு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தந்தை(32),தாய்(28) மற்றும் மகன்(04) ஆகியோரே கொலை செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்ட இடத்தில் டி-56 ரக துப்பாக்கி மற்றும் மில்லிமீற்றர் 9 ரக துப்பாக்கி ரவைகள் என்பன காணப்படுவதாக பொலிஸார் கூறினர்.
உயிரிழந்த மூவரின் சடலங்களும் பலபிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.




