தும்மலசூரிய பகுதியில் இராணுவம் மற்றும் பொலிஸ் சோதனையில் 08 பெற்றோல் குண்டுகள் மீட்பு

(FASTNEWS | COLOMBO) – தும்மலசூரிய – யதம்வெல பகுதியில் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து நடத்திய சோதனையின் போது 07 ​பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, 08 பெற்றோல் குண்டுகள், மோட்டார் சைக்கிள் மற்றும் 5,60,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

தும்மலசூரிய பகுதிகளைச் ​சேர்ந்தவர்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.