இலங்கை இராணுவம், நெடுஞ்சாலை சாலை பராமரிப்பு மற்றும் முகாமைத்துவப் பிரிவு மற்றும் மனுசத் தெரண ஒன்றிணைந்து நெடுஞ்சாலை வீதியின் இரு பக்கங்களிலும் மரங்களை நாட்டு பராமரிப்பதற்கான வேலைத்திட்டம் இன்று(23) காலை 8.30 மணியளவில் ஆரம்பமானது.
´துருலிய வெனுவென் அபி´ என்ற குறித்த இந்த வேலைத்திட்டம் இயற்கைக்காக பூமியில் பிறந்த குழந்தைகளாக சிந்திப்போம் என்ற கருப்பொருளில் நடைபெற்று வருகிறது.
இந்த தேசிய நிகழ்வு இராணுவ தளபதி லுதினன் ஜெனரல் மஹேஸ் சேனநாயக்க தலைமையில் அதுருகிரிய நெடுஞ்சாலை உட்பிரவேசிக்கும் இடத்தில் ஆரம்பமானது.
கொட்டாவா, வெலிபெண்ண, கஹதுடுவ, தொடங்கொட மற்றும் கொடகம ஆகிய பகுதிகளிலும் இதற்கான நிகழ்வுகள் இடம்பெற உள்ளது.