குறித்த இந்த சம்பவம் தொடர்பில், துறைமுக அதிகார சபையின் தலைவர் தம்மிக்க ரணதுங்கவை இன்று (24) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கூறப்பட்டிருந்தது.
இதனையடுத்து இன்று நீதிமன்றத்தில் ஆஜரான அவரை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில் விடுவித்து, கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளதுடன் நீதவானால் இவருக்கு கடுமையாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.