துறைமுக தொழிற்சங்கங்களுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்பாடு நிர்வாக அதிகாரிகளினால் நிறைவேற்றப்படாதமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து துறைமுக தொழிற்சங்க தலைவர்கள் இன்று (18) முதல் உண்ணாவிரதப் போராட்டமொன்றில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
துறைமுக தொழிற்சங்கங்களின் தலைவர்கள் மூவர் இன்று துறைமுக நுழைவாயில் 3 இல் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமது கோரிக்கைகளை நிறைவேற்றாது போனால் இப்போராட்டத்தை சாகும்வரையிலான போராட்டமாக முன்னெடுக்கவுள்ளதாகவும் சங்கங்களின் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.