தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்த 08 மாணவர்களுக்கும் விளக்கமறியல்…

வரலாற்று சிறப்புமிக்க கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 08 மாணவர்களையும் எதிர்வரும் பெப்ரவரி 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கெபித்திகொல்லாவ நீதிமன்றம் இன்று(24) உத்தரவிட்டுள்ளது.

தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் 08 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.