தெதுரு ஓயா பாலத்தின் ஊடான போக்குவரத்து நடவடிக்கைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 30ம் திகதி வரை முற்றாக நிறுத்தப்படவுள்ளது.
அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக கட்டுகஸ்தொட்ட – புத்தளம் வீதியில் அமைந்துள்ள தெதுரு ஓயா பாலம் இவ்வாறு தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி குறித்த இந்த காலப்பகுதியில் உந்துருளிகள், முச்சக்கரவண்டிகள் மற்றும் இலகு ரக வாகனங்கள் பாதெனிய – அநுராதபுரம் வீதியில் பலல்ல ஊடாக நிகவரெட்டிய வீதியையும், கனரக வாகனங்கள் பாதெனிய – அநுராதபுரம் வீதியில் தலதகம ஊடாக நிகவரெட்டிய வீதியையும் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(rizmira)