தென்கொரியா சென்றுள்ள வடகொரியாவின் மகளிர் வீராங்கனைகள்…

குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வடகொரியாவின் மகளிர் ஐஸ் ஹாக்கி அணியினர் தென்கொரியா சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன

23 பேர் கொண்ட கூட்டு அணியொன்றை உருவாக்க 12 பனிச்சறுக்கு ஹொக்கி மகளிர் விளையாட்டு வீராங்கனைகளை, வடகொரியா அனுப்பியுள்ளது.

இந்த விளையாட்டு வீராங்கனைகளுடன், வடகொரியாவின் தூதுக்குழுவொன்றும் தென்கொரிய சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளர்கால ஒலிம்பிக் போட்டி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி 25 ஆம் திகதிவரை தென்கொரியாவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.