தென்னாபிரிக்கா அணியின் வெற்றிக்கு நாமே காரணம்…

(FASTNEWS| COLOMBO)- இலங்கை அணியின் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து சரிந்தமையே தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைவதற்கு காரணம் என அணியின் தலைவர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய(03) போட்டிகளின் பிற்பாடு மைதானத்தில் வைத்து, லசித் மாலிங்க உரையாற்றுகையில்;

“..அடுத்த போட்டியில் வெற்றிப் பெறுவதற்கு, அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களுக்கு தமது பொறுப்பை உணர்த்தி களமிறங்கவுள்ளோம்.. இலங்கை அணியின் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து சரிந்தமையே தென்னாபிரிக்கா அணியிலன் இலகு வெற்றிக்கு காரணம்…” என தெரிவித்துள்ளார்.