(FASTNEWS|COLOMBO) – தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரம்போசா இன்று(27) இலங்கைக்கு விஜயம் செய்தார்.
தென்னாபிரிக்க ஜனாதிபதியுடன் 20 பேரைக் கொண்ட குழுவினர் வந்துள்ளனர்.
தென்னாபிரிக்க ஜனாதிபதி அந்நாட்டின் இராணுவத்துக்கு சொந்தமான இராணுவ விஷேட விமானத்தில் வந்திருந்தார்.
இன்று காலை 10.20 இற்கு வருகை தந்த தென்னாபிரிக்க ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் பிற்பகல் 12.30 மணியளவில் இங்கிருந்து பயணமானார்கள்.