தென்கொரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அந் நாட்டு ஜனாதிபதி முன் ஜே இன் க்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று(29) இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஜனாதிபதிக்கு விசேட இராணுவ மரியாதை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், இரு தரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் இதன்போது ஐந்து உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.