தெற்கு அதி­வேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்…

நாட்டில் நிலவும் கால­நி­லை­யினால் தெற்கு அதி­வேக நெடுஞ்சாலை மற்றும் கட்­டு­நா­யக்க அதி­வேக நெடுஞ்சாலைகளிலும் பல விபத்து சம்­ப­வங்கள் பதி­வா­கி­ய­தோடு அதி­வேக நெடுஞ்­சா­லை­களில் பய­ணிக்கும் சார­திகள் அவதானத்துடன் இருக்­கு­மாறும் அவர்கள் மணிக்கு 60Km வேகத்தில் வாக­னங்­களைச் செலுத்­து­மாறும் அதி­வேக நெடுஞ்சாலைகள் பரா­ம­ரிப்பு மற்றும் திட்­ட­மிடல் பணிப்­பாளர் எஸ்.ஓப்­ப­நா­யக்க அறி­வு­றுத்­தி­யுள்ளார்.

இதே­வேளை, நாட்டின் பல பாகங்­களில் நேற்று பெய்த கடும் மழையினால் கொழும்பு உள்­ளிட்ட பல நக­ரங்­களின் புற வீதிகள் நீரில் மூழ்­கி­யுள்­ள­தாகவும் இதுவரையில் பதுளை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் மாத்திரம் மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகா­மைத்­துவ மத்­திய நிலையத்தின் பணிப்­பாளர் பிரதீப் கொடிப்­பிலி தெரிவித்துள்ளார்.