தெற்கு அதிவேக வீதியின் அனைத்தும் நுழைவாயில்களும் திறக்கப்பட்டுள்ளது..

தெற்கு அதிவேக வீதியின் கடவத்தை தொடக்கம் கொடகம வரையிலுள்ள நுழைவாயில்கள் அனைத்தும் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக தெற்கு அதிவேக வீதியின் பாதை பராமரிப்பு மற்றும் ஆய்வு பணிப்பாளர் எஸ்.ஒபநாயக்க தெரிவித்தார்.

நேற்று(31) இரவு கொக்மதுவ தொடக்கம் கொடகம வரையிலான பகுதியில் வாகனங்கள் செல்ல குறித்த நுழைவாயில்கள் திறக்கப்பட்ட நிலையிலேயே அனைத்து நுழைவாயில்களும் இவ்வாறு திறக்கப்பட்டுள்ளது.

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தெற்கு அதிவேக வீதியின் பல நுழைவாயில்கள் வௌ்ளத்தில் மூழ்கியமையால் மூடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)