தெற்கு அதிவேக வீதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு நடவடிக்கை

புதுவருடத்தினை முன்னிட்டு தெற்கு அதிவேக வீதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு அதிவோக வீதி பணிப்பாளர் எஸ்.ஓப்பநாயக்க தெரிவித்தார்.

தமிழ், சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர்களுக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

தெற்கு அதிவேக வீதியூடாக, கொழும்பு தொடக்கம் மாத்தறை மற்றும் காலி நோக்கி பயணிக்கும் மக்கள் பொதுப் போக்குவரத்தினை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.