தெஹிவளை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான வேன்.. – நபர் ஒருவர் கைது..

(FASTNEWS | COLOMBO) – தெஹிவளை – அத்தபத்து மாவத்தையில் உள்ள தேவாலயத்திற்கு அருகில் உள்ள வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கு இடமான வேன் ஒன்றிலிருந்து சற்றுமுன்னர் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெமடகொடை பகுதியில் வசிக்கும் 26 வயதுடைய நபர் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த அத்தபத்து வீதியானது மூடப்பட்டு பலத்த பாதுகாப்பு இடப்பட்டு சோதனைகளை முன்னெடுத்து வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.