தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி திருத்த சட்டமூலமானது அரசியலமைப்பிற்கு உள்ளடங்கி உள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதென்று சபாநாயகர் கருஜயசூரிய இன்று(22) பாராளுமன்றில் அறிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றம் கூடிய போது தீர்மானங்களை அறிவிக்கும் போது சபாநாயகர் இவ்வாறு கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி திருத்த சட்டமூலம் அரசியலமைப்பின் சில பிரிவுகளுக்கு முரணாக இருப்பதால், அது மக்கள் கருத்தறிவதற்கு விடப்பட வேண்டும் அல்லது பாராளுமன்றில் பெரும்பான்மை வாக்குகளில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கூறி சட்டத்தரணி ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு நீதிமன்றத்தால் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.