விவசாயத்தில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தி, விவசாயிகளின் பொருளாதாரம் மற்றும் நாட்டின் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் தேசிய உணவு உற்பத்தி புரட்சி இன்று(06) முதல் ஆரம்பமாகிறது.
கெக்கிராவை, திப்பொட்டுவ குளத்துக்கு அருகில் உணவு உற்பத்தி புரட்சி நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
தேசிய உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை செயற்படுத்தப்படவுள்ளது.
இன்று(06) முதல் ஒக்டோபர் 12 ஆம் திகதி வரை உணவு உற்பத்தி வாரம் அமுலாக்கப்படுகிறது.