தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ஸ்ரீ ஹெட்டிகே, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
நீண்ட நாட்களுக்கு வெளிநாட்டில் தங்கியிருக்க வேண்டியிருப்பதன் காரணத்தால், அந்தப் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக மேலும் தெரியவருகிறது.
தன்னுடைய இராஜினாமா கடிதத்தை அரசியலமைப்பு பேரவைக்கு அவர் அனுப்பிவைத்துள்ளதாகவும், தலைவர் பதவியை இராஜினாமா செய்தாலும், ஆணைக்குழுவின் உறுப்பினராக தான் தொடர்ந்து செயற்படுவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.