தேசிய வேலைத்திட்டம் ஒன்றினை அறிமுகம் செய்ய தீர்மானம்

(FASTNEWS|COLOMBO) – எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வினைத்திறனான பயன்பாடு தொடர்பில் தேசிய வேலைத்திட்டம் ஒன்றினை அறிமுகம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மின்சக்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகம் மற்றும் இலங்கை பேண்தகு எரிசக்தி அதிகார சபை இணைந்து முன்னெடுக்கவுள்ள இந்த வேலைத்திட்டத்திற்கு அனைத்து அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் இணைத்து கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினால் குறித்த நிறுவனத்தில் எரிசக்தியை பயன்படுத்துவது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.