தேய்காய் எண்ணெய்களை விற்பனைக்கு ஏற்ற வகையில் விநியோகிக்க வேண்டும்…

சந்தைக்கு விநியோகிக்கப்படும் அனைத்து தேய்காய் எண்ணெய் வகைகளையும், விற்பனைக்கு ஏற்ற வகையில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சந்தையில் விநியோகிக்க வேண்டும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை அனைத்து தேங்காய் எண்ணெய் தயாரிப்பாளர்களுக்கும் அறிவித்துள்ளது.

விற்பனை செய்யப்படும் தேங்காய் எண்ணெய் போத்தல் மற்றும் ஏனைய பொதிகளில் தேங்காய் எண்ணெயின் வகை, தயாரிப்பு, காலாவதியாகும் தினம், சில்லறை விலை, எடை, தயாரிப்பாளரின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களை தெளிவாக குறிப்பிடப்பட வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்காத தேங்காய் எண்ணெய் தயாரிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகார சபை தெரிவித்துள்ளது.