தன்னுடைய அனுமதியின்றி குறித்த ஒரு கட்சி தன்னுடைய பெயரை வேட்பாளராக பதிவு செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் நேற்று(07) முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
பெண் வேட்பாளர் ஒருவரே இவ்வாறு குறித்த முறைப்பாட்டினைபதிவு செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
முறைப்பாட்டின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#g-reesh