எல்லை நிர்ணயப் பிரச்சினை இல்லாத உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல்களை நடத்துவது தொடர்பிலான சட்ட நிலைமைகள் குறித்து ஆராயும் நோக்கில், தேர்தல்கள் செயலகம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
எல்லை நிர்ணய பிரச்சினைகள் இல்லாத 61 உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேர்தல்களை நடத்தும் வாய்ப்புள்ளதாக, அண்மையில் தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பு அச்செயலகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளன.