தேர்தல் குறித்து கூட்டு எதிர்க்கட்சியினர் ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறைப்பாடு..

அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறியுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தாது, தேர்தலினை ஒத்தி வைக்கப்பட்டமை குறித்து கூட்டு எதிர்க்கட்சியினர் ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

மழை வெள்ளம், மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் குறித்த முறைப்பாட்டில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

(rizmira)