தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 1467 முறைப்பாடுகள் பதிவு

தேர்தல் சட்ட மீறல்கள் குறித்து இதுவரை 1467 முறைப்பாடுகள் தேர்தல்கள் செயலகத்திற்குப் பதிவாகியுள்ளன.

சுவரொட்டிகள் மற்றும் கட்டவுட்களை காட்சிப்படுத்தல் தொடர்பாகவே அதிக எண்ணிக்கையான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாடுகளை ஏற்கும் பிரிவு குறிப்பிடுகின்றது.

இதுதொடர்பாக 309 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதுதவிர கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தல் தொடர்பிலும் 218 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அரசாங்க உடைமைகளை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை குறித்து 192 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அத்துடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் குறித்து 37 சம்பவங்களும் தமக்குப் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாடுகளை ஏற்கும் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.