தேர்தல் சட்டம் மீறல் தொடர்பில் 5 ஆயிரம் முறைப்பாடுகள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேர்தல் சட்டத்தினை மீறிய சம்பவம் தொடர்பில் 5,814 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையங்களில் குறித்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.