தேர்தலுடன் தொடர்புடைய 466 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் அதிகபடியாக 441 முறைப்பாடுகளும் வன்முறைகள் தொடர்பில் 25 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்திலிருந்து மாத்திரம் 104 தேர்தல் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், ஒவ்வொரு முறைப்பாடுகள் தொடர்பிலும் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.