தைப்பொங்களை முன்னிட்டு இன்று முதல் விசேட பஸ் சேவைகள்…

தைப்பொங்களை முன்னிட்டு இன்று(11) முதல் எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் நடவடிக்கை பிரிவின் பிரதம அத்தியட்சகர் சரத் வல்கம்பாயே கூறியுள்ளார்.

இதேபோன்று தைப்பொங்களின் பின்னர் கொழும்பு நோக்கி வருவதற்கான விசேட பஸ்சேவைகளும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பஸ்சேவைகளை பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் ஏற்படுமாயின் 011 2 555 555 என்ற இலங்கை போக்குவரத்து சபையின் இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் சரத் வல்கம்பாயே சுட்டிக்காட்டியுள்ளார்.