தொடரும் மந்தமான காலநிலை

நாட்டின் அனைத்து கடலோரங்களிலும் இன்று மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன் குறிப்பாக கிழக்கு கரையோரங்களிலும் காற்றுடன் கூடிய மழைக்கு சாத்தியம் காணப்படுகிறதாகவும்  வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

புத்தளம் திருகோணமலை காங்கேசன்துறை காலி பொத்துவில் அம்பாந்தோட்டை கடலோரங்கள் கடினமாக காணப்படும் எனவும் இப்பிரதேசங்களில் காற்றின் வேகம் 50 – 60 கிலோமீற்றரளவில் வீசலாம் எனவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.