தொடர்ந்தும் இரண்டு ரயில் சேவைகள் இரத்து…

கடந்த நான்கு நாட்கள் நீடித்த பணிப்புறக்கணிப்பை அடுத்து இன்று(13) ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பிய போதும், 02 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

சிலாபத்தில் இருந்து காலை 6.10 இற்கு கொழும்பு நோக்கிப் புறப்படவிருந்த ரயிலும், காலை 6.00 மணிக்கு மருதானையில் இருந்து பொல்கஹவலை நோக்கி புறப்படவிருந்த ரயிலுமே சேவையில் ஈடுபடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கடந்த நான்கு நாட்களாக தொடரூந்து பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட பணி நிறுத்த போராட்டம் காரணமாக 7 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதோடு, இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 10 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.