தொடர் குடியிருப்பில் தீ விபத்து…

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லோகி தோட்ட கூமூட் பிரிவு தோட்ட குடியிருப்பில் நள்ளிரவு 12 மணியளவில் தீ பரவியுள்ளது.

20 வீடுகள் கொண்ட தொடர் லயக்குடியிருப்பில் ஒரு வீட்டிற்குள் ஏற்பட்ட தீயினால் வீடு முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேச மக்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.