பாராளுமன்றில் ஒலி வாங்கி ஒழுங்காக வேலை செய்கிறதா என்று பார்க்க முடியாதவர்கள் அங்கு கோட்-சூட் அணிந்து வருவது எதற்கு என கேள்வியெழுப்பியுள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச.
நேற்றைய தினம் நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதமும் வாக்கெடுப்பும் நிகழவிருந்த நிலையில் பாராளுமன்றில் ஒலி வாங்கிகள் இயங்காத காரணத்தினால் சபை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இது குறித்து கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், மைக் வேலை செய்கிறதா என்று பார்க்கக் கூட முடியாதவர்கள் கோட்-சூட் அணிவதாகவும் ஆயுதக் களஞ்சியத்தைப் பாதுகாக்க முடியாதவர்கள் இராணுவத்தளபதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.