நாளுக்கு நாள் அழிவடைந்து வரும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாப்பதற்காக புதிய சட்டமூலம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், மண்டாவல இதுகுறித்து தெரிவிக்கையில், இதன் ஊடாக தொல்பொருள் இடங்களின் அழிவை தடுப்பதற்காக புதிய கட்டளை சட்டம் உருவாக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.