கல்விசார் தொழிற்சங்க ஒன்றியமானது இன்று(04) மேற்கொண்டுள்ள தொழிற்சங்க போராட்டமானது தோல்வியடைந்துள்ளதாகவும், அனைத்து பாடசாலைகளிலும் இன்று கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
குறித்த தொழிற்சங்க போராட்டம் குறித்து அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில்;
“இன்று நடைபெற்ற தொழிற்சங்க நடவடிக்கை முற்றுமுழுதாக தோல்வியடைந்துள்ளது என்றே கூற வேண்டும். குறிப்பாக அனைத்து பாடசாலைகளும் இன்று இயங்கியது.. கல்வி நடவடிக்கைகளை குழப்புவதில் சில அதிகாரிகளது தலையீடுகள் இருந்ததாகவும் கூறப்படுகின்றது. அது குறித்து முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இது குறித்து எதிர்வரும் தினங்களில் விசாரிக்கப்படும்..”