ஹொரனை வஹவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள றப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா நச்சுவாயு கசிவால் 5 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து ஹொரனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.