நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தமது கட்சிக்கு கிடைத்துள்ள தோல்வியை முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளார்.
எனினும் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட விருப்பம் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
´நான் பிரதமராக வேண்டும் என்று கண்ட கனவு மறைந்துபோய் விட்டது. அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன். நாங்கள் சிறந்த போட்டி ஒன்றில் தோல்வியடைந்துள்ளோம்´ என்று மஹிந்த ராஜபக்ஷ ஏஎப்பி செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.
22 மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 8 மாவட்டங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி 11 மாவட்டங்களிலும் வெற்றிபெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி தாங்கள் தோல்வி அடைந்துள்ளதாகவும் இது ஒரு மாறுபட்ட போட்டி என்றும் அவர் கூறினார்.