நகர சபை தலைவரை கைது செய்ய உத்தரவு

கொலன்னாவை நகர சபையின் தலைவர் ரவிந்திர உதயசாந்த உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்யுமாறு கொழும்பு புது கடை மேலதிக நீதவான் மொஹமட் நிஹாய் இன்று உத்தரவிட்டுள்ளார்.

இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மீதொடமுல்ல குப்பை மேட்டுக்கு எதிரான  ஆர்ப்பாட்டத்தின் போது மக்கள் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்பான வழக்கிற்கு குறித்த நபர்கள் முன்னிலையாகாததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு மே மாதம் 9ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.