(FASTNEWS | COLOMBO) – துபாயில் கைதாகி இலங்கை நாட்டுக்கு நாடுகடத்தப்பட்ட இளம் தலைமுறையின் பாடகர் நதிமல் பெரேரா இந்நாட்டுக்கு வருகை தந்திருந்தமை தொடர்பில் நடிகர் சாரங்க திசாசேகர சமூக வலைதளத்தில் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
கடந்த 27ம் திகதி காலை துபாயினால் நாடு கடத்தப்பட்ட நதிமல் பெரேரா இந்நாட்டுக்கு வருகை தந்திருந்த போதிலும், அவரை வரவேற்க அவரது எந்தவொரு உயிர் நண்பரும் விமான நிலையத்திற்கு வரவில்லையே என்பது தொடர்பில் அவரது சமூக வலைதள பதிவு அமைந்திருந்தது.
