நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கையொப்பம் இடாத ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதோ…

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் சபாநாயகரிடம் கையளிக்கவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஒன்றிணைந்த எதிர்கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிநாடு சென்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க ஆகியோர் கையொப்பம் இடவில்லை என தெரியவருகின்றது.

குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நேற்று(20) ஒன்றிணைந்த எதிர்கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 52 பேர் கையொப்பம் இட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.