(FASTNEWS|COLOMBO ) – நேற்று(18) காலை 06 மணி முதல் இன்று(19) காலை 06 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 406 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கையின் கீழ் இதுவரை 9399 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது .